நவீன செவ்வியல் நாவல் என்பதற்கான ஒரே சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது ' இடைவெளிதான் . பரந்து விரிந்த பிரமாண்டமான தளம் இல்லையென்றாலும் சிறிய , ஆனால் அடர்த்தியும் ஆழமும் நுட்பமும் கூடிய நவீனப் படைப்பு , படைப்புலகம் இட்டுச் செல்லும் அறியப்படாத பிராந்தியங்களுக்கு முற்றாகத் தன்னை ஒப்புக்கொடுத்து , அச்சமற்ற , சமாளிப்புகளற்ற பயணத்தை மேற்கொண்ட நவீனப் படைப்பாளி சம்பத் . தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும் . கண்டடைவதன் பரவசத்தையும் தான் . இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை . அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன் . சி . மோகன்
No product review yet. Be the first to review this product.