மண்ட்டோ படைப்புகளை ஆபாசமானது என்று ஒதுக்கப்பார்த்தார்கள். ''விலைமாதுகள் பற்றி எழுதுவதே ஆபாசம் என்றால், அவர்களின் இருப்பும் ஆபாசமானதுதான். அவர்களைப் பற்றி எழுதுவதைத் தடை செய்வதை விரும்பினால், முதலில் அவர்களை ஒழித்துக்கட்டுங்கள். பிறகு அவர்களைப் பற்றி எழுதுவது தானாக மறைந்துவிடும்'' என்று மண்ட்டோ பதிலளித்தார். ஆபாச இலக்கியம் படைத்ததாக ஆறு முறை நீதிமன்றப் படியேற வைக்கப்பட்டார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றியே அதிகம் எழுதியவர் என்று ஒரு சிமிழுக்குள் அடைக்கப்பார்த்தார்கள். 'இந்தியா என்ற ரொட்டித்துண்டை ராட்கிளிஃப் இரண்டாகக் கிழித்துப் போட்டான். ஆனால், அவை இன்னும் தீயில் போகாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. நீங்கள் அந்தப் பகுதியில் இருந்து தீ மூட்டுகிறீர்கள். நாங்கள் இந்தப் பகுதியில் இருந்து தீ மூட்டுகிறோம். ஆனால், நெருப்பின் நாக்குகள் அடுப்புக்கு வெளியே எங்கோ எரிந்துகொண்டிருக்கின்றன’ என்று நேருவுக்கு எழுதியவர் மண்ட்டோ. -( ஜூனியர் விகடன்)
No product review yet. Be the first to review this product.