யுவன் சந்திரசேகரின் ஏழாவது நாவல் ‘ஊர்சுற்றி’.அவரது நாவல்களில் வாசகனான இந்த எல்லா நாவல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காண்கிறேன்.எல்லா நாவல்களும் பயணத்தின் கதைகளே. ‘ஊர்சுற்றி’யில் அது சகல சாத்தியங்களுடனும் முன்நகர்கிறது. ஊர்சுற்றியான சீதாபதி மேற்கொள்ளும் யாத்திரை,இடங்களை மட்டும் சார்ந்ததல்ல.அது உறவுகளையும் சம்பவங்களையும் பின்புலங்களையும் ஊடுருவிச் செல்கிறது.மிக முக்கியமாகக் காலத்தினூடே சஞ்சரிக்கிறது.தொடக்கமும் முடிவும் இல்லாத சுவாரசியம் குறையாத சாகசம் கலையாத மானசீகப் பயணமாக நிலைகொள்கிறது. -சுகுமாரன்
No product review yet. Be the first to review this product.