தமிழ் சினிமா மண்ணுக்குக் கிடைத்த தழைச்சத்து- இயக்குநர் சேரன். பாரதிராஜாவுக்குப் பிறகு, நிஜமான கிராமியத்தைக் கேமராக் கண்களில் பதிவு செய்தவர். சமகால சினிமா இலக்கணங்களுக்கு முற்றிலும் பொருந்தாத விதிகளைக் கொண்டது பாரதிகண்ணம்மாவின் திரைக்கதை அமைப்பு. வெகுஜன இயக்குநர்கள் இடதுகையால் புறந்தள்ளும் கதைக்கரு இது. ஆனால், 'எனக்கான சினிமாவை நானே தீர்மானிப்பேன்' என்று சேரனுக்குள் முழங்கிய ஒரு ஆவேசக் குரல் பாரதிகண்ணம்மாவுக்கு முழு உருவம் கொடுத்தபோது எல்லோருக்கும் புரிந்தது சேரன் தன்னை நிரூபிக்க, தன் படைப்பை நிரூபிப்பவர்.
No product review yet. Be the first to review this product.