ஜே.பி.சந்திரபாபு, தன் மனத்தில் பட்டதை ஒரு போதும் மறைத்துப் பேசியதில்லை. அதனால் தான் அந்த அரிதான கலைஞரை சினிமா உலகம் புறக்கணித்தது.
மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின்பே திரையுலக வாய்ப்பைப் பெற்ற சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்திலேயே யாராலும் நெருங்க முடியாத, அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு மறைந்தவர். தன் சொந்த வாழ்க்கையின் தீரா சோகங்களுக்குத் திரையிட்டுக் கொண்டு, திரை முன்னிருக்கும் மக்களை மகிழ வைத்த மகத்தான நடிகர்.
அடிக்கடி அதிரடியான கருத்துகளை துணிச்சலுடன் வெளியிட்டு, திரை உலகின் முகத்திரையைக் கிழித்தவர். எந்தத் திலகத்துக்கும் எப்போதும் சந்திரபாபு பணிந்து போனதில்லை.
நிஜம் மட்டுமே பேசத் தெரிந்த நிஜக் கலைஞனின் நிஜமான வாழ்க்கை வரலாறு, அரிய புகைப்படங்களுடன்.
No product review yet. Be the first to review this product.