இந்நூல் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, அழகியல் மற்றும் சமூகவியல் குறித்த ஆழமான கருத்துக்களை மிக எளிமையான முறையில் சொல்கிறது. நாம் வாழ்கின்ற நூற்றாண்டின் ஒரு புதிய கலையான சினிமாவை ஆக்கப் பூர்வமாக உபயோகிப்பதற்கு, மக்களின் சினிமா பற்றிய ரசனையும் ஆக்கப் பூர்வமாக இருக்க வேண்டும். அதற்கு சினிமா கோட்பாடு பற்றிய அறிவு எந்த அளவு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது இப்புத்தகம். திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்காக மட்டும் அல்லாமல், சாதாரண மக்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களை மனதில் கொண்டு விசேஷமாக எழுதப்பட்டது இப்புத்தகம். சினிமா கோட்பாடு பற்றி முதன் முதலாக எழுதப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக மட்டும் இல்லாமல், இது நாள் வரைக்கும் சினிமா பற்றிய ஒரு மிகச்சிறந்த புத்தகமாகவும் உலகெங்கும் போற்றப்படுகிறது. இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் இப்புத்தகம் முதலில் வந்தது(1992).
No product review yet. Be the first to review this product.