நூற்றாண்டு விழா கண்டுள்ள இந்திய சினிமா, பிறந்தபோது(1913) பிறந்தவர் குண்டூசி பி.ஆர்.எஸ்.கோபால் அவர்கள்.சினிமாவுடன் வளர்ந்த அவர் திரையுலகில் தமக்கேற்றபட்ட நெடிய அனுபவ பயணத்துடன்,உலகின் பிரபல வழக்குகள் பற்றியும் இப்புத்தகத்தில் விவரிக்கிறார்.1929ல் தனது எழுத்து பணியை தொடங்கிய ‘குண்டூசி’ பி.ஆர்.எஸ்.கோபால் 1935ஆம் ஆண்டு முதல் சினிமா எழுத்தாளராக பரிமளிக்க பட்டார்.நம் நாட்டிற்கு சினிமா எப்படி வந்தது என்பதை அனுபவத்தில் கண்டதை,தமக்கேயுரிய நகைச்சுவை பாணியில் தொடங்கி,அன்றைய சினிமா கலைஞர்கள் மக்களை மகிழ்விக்கவும்,தங்கள் வாழ்கையை நிலைநிறுத்திக் கொள்ளவும் பட்ட போராட்டங்கள் –அந்த போராட்டங்கள்,சில நேரங்களில் வழக்குகளாக உருவெடுக்கும் போது அவர்கள் பட்டபாடுகள் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு?’யார் கார்டியன்” வழக்கு ,நட்சத்திர விளம்பரம் பற்றிய வழக்கு,நந்தனார் இன்சூரன்ஸ் வழக்கு என அந்த கால பட உலக பிரபல வழக்கு அனுபவங்கள் வரை கோபால் அவர்கள் விறு விறுபாக எழுதியுள்ள இந்நூல்,இந்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள உதவும்.
No product review yet. Be the first to review this product.