அனைத்தும் பார்வையாளர்கள் நெஞ்சத்தில் ஒரு வேதனையான உணர்வை, சங்கடத்தை, ஒருவிதமான வெட்கத்தை உண்டுபண்ணவேண்டும். சோகமானது ஜீர உணர்வுக்கு மாறாவிட்டால், நான் மிகச் சாதரணமாணவனாகவும், உணர்வற்றவனகவும் உணர்கிறேன். நான் என்னை அவமதித்துக்கொள்கிறேன். ஏனென்றால் என்னால் விஷயங்களின் எல்லைவரையில் சொல்லமுடியவில்லை என்று அர்த்தம். ஒருவன் வெகு தொலைவு செல்ல வேண்டும், தெற்கை அடைவதற்கு”.
இது இயொநெஸ்கோ தன் நாடகங்களைப்பற்றியும், தன்னைப்பற்றியும் சொன்னது. இயொநெஸ்கோவின் நாடகங்களிலெல்லாம் நாம் சிரிப்போம். அனால் அந்தச் சிரிப்பு ஒருவிதச் சங்கடம் கலந்த சிரிப்பு. மேடையில் பேசும் பாத்திரங்கள் மேலும், மேலும் நம்மைப் போலிருக்கிறார்கள். நம் வார்த்தைகளை, நம் அடிமன எண்ணங்களைத் திருடிவிடுகிறார்கள். அவர்கள் நாம்தாம்.
No product review yet. Be the first to review this product.