(சரித்திர, சமூக நாடகங்களின் தொகுப்பு)
நாவல்கள்,சிறுகதைகள் வாசிப்பது போன்றே நாடகங்கள் வாசிப்பதும் சுவாரஸ்யம் தருகிற ஒன்றுதான்.இன்னும் சொல்லப் போனால்,சொல்ல வருகிற விஷயத்தை அதிகம் சுற்றி வளைக்காமல்,நீண்ட வருணனைகள் இல்லாமல் இரத்தினச் சுருக்கமான உரையாடல்கள் மூலம் நேரடியாக நமக்குச் சொல்லிவிடுபவை நாடகங்கள் எனலாம்.
பாத்திரங்கள்-கதை மாந்தர்கள் நம் கண்ணெதிரே நின்று உரையாடுகிற உணர்வை நாடகங்கள் அளிப்பது போன்று வேறு படைப்புகள் அளிக்கின்றன என்று சொல்லவியலாது.இலக்கிய உத்திகளில் நாடக வடிவம் என்பது ஒரு தனிச்சிறப்புடைய உத்தி என்றால்,அது மிகையில்லை. இன்னும் சொல்லப்போனால்,’நாடகம்’ என்பதுதான்-அதாவது ‘கூத்து’ என்பதுதான் ஆதி உத்தி என்பதை அனைவரும் ஏற்பர்.
மொழி தோன்றும் முன்னரே கூத்து வடிவம்-அதாவது குறிப்பால்,
சைகையால் எதையும் உணர்த்துவது தோன்றிவிட்டது என்பதே மொழி வரலாறு கூறும் உண்மை.
No product review yet. Be the first to review this product.