இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும் குன்றக்குடி வட்டார மக்களின் கதைகள்தாம். சாதரண மக்களின் கதைகள். ஆனால், இவர்கள் மனித மதிப்புகளை அசாதாரணமாகப் பேணுகிறவர்கள். புல்லாக, மரமாக மண்ணோடு நிலைத்து நிற்ப்பவர்கள். இக்கதைகளில் ஒரு தேர்ந்த எதார்த்தக் கலைஞனின் கைவண்ணம் அருமையாக வெளிப்படுகிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம் முதலிய கோட்பாடுகளைப் பற்றியோ, நேர்கோட்டு எழுத்து, முறிவு எழுத்து, நனவோடை எழுத்து போன்ற எழுத்து முறைகள் பற்றியோ அதிகம் கவலைப்படாமல் தன் உணர்வுகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற தவிப்பில் எழுதப்பட்டவை.
No product review yet. Be the first to review this product.