இளையராஜாவின் இசை இரண்டு தலைமுறைகளைக் கடந்து இப்போது மூன்றாவது தலைமுறையினரிடம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பல தலைமுறைகளைத் தன்வசப்படுத்திக்கொண்டே நகரும் வல்லமை கொண்டது அவரின் இசை.
இந்தச் சிறிய புத்தகத்தில் இந்த அளவு இசையைப் பற்றிய மிக அழகான குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இசையை வெறும் சத்தம், ஓசை என்ற அளவிலேயே கேட்டு, ரசித்து சிலாகித்துவிட முடிகிறது. இசை ஒரு தத்துவம், அது ஒரு கலாச்சாரம், ஒரு காலத்தின் வரலாறு என்னும் அளவில் புரிந்துகொள்ள முடிவதுதான் இந்நூலின் வெற்றி. இந்நூலைப் படித்துக் கொண்டே வரும் போது பிரேம்-ரமேஷ் அவர்களின் கேள்விகளும் இளையராஜாவின் பதில்களும் வாசகர்களுக்கு ஒருவகை இசைமயக்கத்தை உண்டாக்குவதோடு,அது பற்றிய தெளிவையும் வழங்கி காட்சியாவதை உணரலாம்.
No product review yet. Be the first to review this product.