இந்தக் கேள்வி பதில் பகுதியினால்-என்னைப் பற்றி ரசிகர்களும் வாசகர்களும் கற்பனை செய்து வைத்திருந்த அந்தத் தோற்றம் முற்றிலும் மறைந்துபோய் இப்படிப்பட்டவரா இவர்? என்று எனக்கு ஒரு புதிய தோற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
பெரும்பாலான ஆன்மிகக் கேள்விகளுக்கு பகவான் ரமணரின் உபதேசங்களைத்தான் பதிலாகச் சொல்லி இருந்தேன். ஏனெனில் அதற்குமேல் அந்தக் கேள்விக்கு இன்னொரு பதில் கிடையாது.
மற்றபடி-வாழ்க்கையைப் பற்றியும்-இசையைப் பற்றியும் இன்னும் பலப் பல விஷயங்களைப் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு-என்னுடைய அனுபவ ரீதியின் அணுகுமுறையில் பதில் சொன்னேன்.
கேள்வி பதில் எப்போது வரும் என்ற ஆவலை -வாசகர்கள் மீது தூண்டிவிட்டது இந்தப் பகுதியின் சிறப்பு!
- இளையராஜா
No product review yet. Be the first to review this product.