"முத்து எடுக்கலாம் என்று மூழ்குகிறவன் செத்துபோவதும் உண்டு. செத்துப் போகலாம் என்று கடலில் விழுகிறவன் கை நிறைய முத்துகளை அள்ளுவதும் உண்டு." நான் இரண்டாவது ரகம். கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளிஞ்சல்களைக்கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கிற தாழ்வு மனப்பான்மைதான் என் ஒரே சொத்து. கொட்டித் தீர்க்கிற குற்றால அருவிதான் என் வீடு. ஆனால், அங்கும் நான் கவிழ்த்து வைக்கப்பட்ட குடமாகவே இருந்துதிருக்கிறேன். எல்லாவற்றையும் மீறி என்னையும் வெற்றி முத்தமிட்டிருக்கிறது. ‘வெற்றியை ஒருவரின் பிறப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை. உழைப்புதான் தீர்மானிக்கிறது’ என்னும் என் வாழ்க்கை அனுபவத்தை, எழுத்து கண்ணாடியில் பார்த்துக்கொண்ட முதல் முயற்சியே இந்த நூல்.
- இப்படிக்கு சூர்யா
No product review yet. Be the first to review this product.