தமிழ்த் திரை இசையில் கே.வி.மகாதேவன், ஏ.எம்.ராஜா, ராமமூர்த்தி , எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்று எத்தனையோ ஜாம்பவாங்கள் கோலோச்சியிருந்தாலும் அவர்களெல்லாம் தொடமுடியாத உயரத்தை 'ஜெய் ஹோ' என்ற ஒற்றைப் பாடலின் மூலம் தொட்டிருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே.
இந்திய நட்சத்திரங்கள் பலருக்கு ஆஸ்கர் வெறும் கனவாகவே கரைந்திருக்கிறது. அதை நனவாக்கி, இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றபோது, ரஹ்மான் உச்சரித்த வார்த்தைகள்... 'எல்லாப் புகழும் இறைவனுக்கே!' உலக அரங்கில் உச்சரிக்கப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட ஒவ்வொரு தமிழனும் அந்த கணத்தில் நெகிழ்ந்து போயிருப்பான்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட ரஹ்மானின் குழந்தைப் பருவம் தொடங்கி, அவர் திரைத்துறையில் சாதனைகள் படைத்தது வரை, சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
No product review yet. Be the first to review this product.