யுத்தகளப் போராளிகளுக்கு இணையாக துச்சமென உயிரை மதித்து ஒளிப்பதிவு செய்து உலகுக்கு ஆவணப்படுத்தும் கேமரா போராளிகளைப் பற்றி தமிழில் முதன் முறையாக பதிவு செய்யும் முயற்சியை மிக அற்புதமாகச் செய்துள்ளார் எழுத்தாளர் ஜெகாதா.
‘உயிரைப் பறிக்கும் விளையாட்டு யுத்தம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
சண்டை என வந்துவிட்டால் சாட்சி கண்டிப்பாக வேண்டியிருக்கிறது.
எங்கோ நடந்த யுத்தம் யார் கண்ணிலும் படாமல் ஒழிந்தது என்று யுத்த வரலாற்றை எவரும் இனி மூடி மறைத்துவிட முடியாது.
தலையில் கொள்ளி வைத்துக்கொண்டு இருளை விலக்கிப் பார்க்க முனையும் அசகாய சூரர்களின் யுத்தகள சாகச பயணங்களை ஆசிரியர் இந்நூலில் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.