ஒரு திரைப்படத்தைப் பொழுதுபோக்காக மட்டும் பார்க்க முடிந்தவர்கள் பாக்கியசாலிகள். காட்சி முடிந்ததும் அங்கேயே அதன் இருப்பும் முடிந்து விடுகிறது.
ஆனால் படம் முடிந்தபிறகு அது மனதில் ஓடத்துவங்கினால் அதன் படைப்பு ரகசியங்களோடு நாம் விளையாடத் துவங்குகிறோம்.
பிறகு,அது நம்மை அன்புடன் அருகில் அழைக்கும். கண்ணாடியைக் கொத்திப் பார்க்கிற சிட்டுக் குருவியைப் போல அருகிலிருந்து தொட்டும் பார்க்கலாம்.
மீன்கொத்தி போல உயர்த்திலிருந்து குதித்து தன் பிம்பத்துக்குள்ளேயே நுழைந்தும்விடலாம். குரோசோவாவின் கனவில், வாங்கோவின் ஓவியத்துக்குள் நுழைந்து கோதுமை வயல்களைப் பார்ப்பது போன்ற பரவசம் தான் இதுவும்.
No product review yet. Be the first to review this product.