{ பிரபல மலையாள நாவலாசிரியர் வைக்கம் பஷீர் எழுதிய 'பால்யகால சகி' என்ற நாவல் அதே பெயரில் 1967ம் ஆண்டு மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்தது. }
பஷீர் ஐம்பத்துதைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல் ‘பால்யகால சகி’ இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்ளால் தொடர்ந்து வாசிகபட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான்.
தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்கு பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிபெருக்கும் கொண்ட புனைக்கதை இது. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களைத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்ககூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்புகளில் ‘உம்மணி வலிய ஓர் ஆளாக’ – இன்னும் பெரிய ஒருவராக – ஆக்குகிறது. இக் குறுநாவலுக்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்.
-சுகுமாரன்
No product review yet. Be the first to review this product.