அறுபதுகளில் எழுபதுகளிலும் எனக்கு முன் திசை துலக்கமாக இருந்தது.கலைக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவின் வழி மெய்மையை கண்டடைய முயற்சித்த தலைமுறையினரும் ஒருவன்தான் நான் என்கிற தெளிவு எனக்கு இருந்தது.பெருமிதம் இருந்தது.அடையாளம்,கலாச்சாரம் சுதந்திரம்,விமோசனம்,விடுதலை எனறால் என்ன,அது எதுவரை எனும் தெளிவும் கூட இருந்தது.கம்யூனிசம் எனும் கற்பனா உலகு,அதற்கான இயங்கியல்,தர்க்கம் என்பது துலக்கமாக எனக்கு முன் இருந்தது.பெர்லின் சுவர் உடைந்தபோது அந்த நம்பிக்கையை காவித்திரிந்தவர்கள் நாடற்றவர்களாக கருத்தியலளவில் இருபத்தியோராம் நூற்றாண்டின் ஜிப்ஸிகளாக ஆகினோம்.உடைந்த கனவுகளை அள்ளி மறுபடி விமோசன தரிசனத்தை அரசியல் நம்பிக்கையை கட்டமைக்க இப்போது முயல்கிறோம்.