2009 ஆம் ஆண்டு ஏ. ஆர். காந்தி கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த ஆனந்த தாண்டவம் திரைப்படத்தின் மூல வடிவமாக அமைந்த நாவல் இது.
‘பிரிவோம்... சந்திப்போம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்தும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனதில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்ககமான அமெரிக்க தமிழ்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.
No product review yet. Be the first to review this product.