தமிழ்த்திரைப்படங்களின் இசை காலங்காலமாக நம்மை வசப்படுத்திக் கொண்டே இருக்கிறது.இரவுகளின் தனிமையில்,நிகழ்வுகளின் கொண்டாட்டங்களில்,பிரிவுகளின் துயரங்களில், வாழ்வின் நிராசைகளில் பாடல்களின் துணை தேடாதவர் மிகச்சிலரே.ஆத்மார்த்தி இந்நூலில் திரைப்பாடல்களின் வரிகளையும் இசையையும் தன் அனுபவங்களின் வெளிச்சம் கொண்டு பதிவு செய்திருக்கிறார்.என்றைக்கோ உங்களைத் தாலாட்டிய பாடல்களையும் இங்கே காணலாம். என்றென்றும் உடன்வரும் பாடல்களுக்கும் இங்கே இடம் உண்டு.இவை ஒரு தனிமனிதனின் இசை கேட்டலின் சுவடுகள் தான். ஆனாலும் ஒரு தலைமுறையின் சுவடுகளாக பதிவாகி இருக்கின்றன என்பதுதான் இந்நூலின் சிறப்பு.ஆத்மார்த்தியின் இசைமயமான மொழி நடையில் தொய்கிறவர்கள்,இவை நாடி நரம்பெல்லாம் இசை ஓடும் ஒரு ரசிகனின் பதிவுகள் என்பதை உணர முடியும்.
No product review yet. Be the first to review this product.