தமிழ்சினிமா 75 ஆண்டுகளைக் கடந்து இன்று உலகத் திரை அரங்கில் அங்கம் வகிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது,உயர்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழ்பட உலகின் ஆரம்பகால 25 ஆண்டுகளில் போடப்பட்ட வலுவான அடித்தளம்.அந்த அடித்தளத்தை ஒருங்கிணைத்து உழைப்பாக தந்தவர்கள் அன்றைய முன்னோடிகள் சாதனையாளர்கள்.அந்த முன்னோடிகளின் வரலாற்றை,பிரபல வரலாற்று நாவலாசிரியர் திரு.சாண்டில்யன் அவர்கள் தமது திரையுலக அனுபவத்துடன் இணைந்து,பொம்மை இதழ்களில் சிறப்பு தொடராக எழுதியபோது,பட உலகினர்,வாசகர்களின் பாராட்டை பெற்றது.இன்று அவற்றை தொகுத்து’சாண்டில்யனின் சினிமா வளர்ந்த கதை ‘என்னும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.தமிழ்ப்பட வரலாற்றில் அன்றைய ஆங்கிலப் பட வரலாறும் இடம் பெற்றிருப்பது இன்னொரு சிறப்பு.
No product review yet. Be the first to review this product.