கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்கை!
பரதக்கலை, வாய்ப்பட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழிகாட்டுவதற்குப் போதிய பின்புலம் இல்லை. ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக்கொம்பைத் தொட்டவர் சரோஜாதேவி. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். கலையின் மீதான பக்தியும் சலியாத உழைப்பும்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஜெமினி என்ற தமிழ் சினிமாவின் மூவேந்தர்களும் கொண்டடாடி மகிழ்ந்த ஒரே ஆபூர்வத் தாரகையாக மின்னினார் சரோஜாதேவி. பொற்கலத் தமிழ் சினிமாவின் வசூல் மகாத்மியுமும் அவரே!
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். படச் சுவோரோட்டிகளில் சரோஜாதேவியின் ஸ்டில் இல்லாவிட்டால் விநியோகஸ்தர்கள் படப்பெட்டியைத் தூக்க மறுத்துப் பின் வாங்கினார்கள் என்பது சரோஜாதேவியின் முக்கியத்துக்கான அளவுகோல். திரையுலகில் என்னுடைய துரித வளர்ச்சிக்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம் என்று சரோஜாதேவியும் பதிவு செய்திருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.