தேசிய ஒருமைபாட்டை வலியுறுத்தும் விதமாக அமைந்த ‘சிங்கமய்யங்கார் பேரன்’, தனக்கு இணையாக மனிதன் இன்னொரு செயற்கை உயிரைப் படைத்தால் உண்டாகம் விளைவைச் சொல்லும் ‘சேகர்’ – ஆகிய இரண்டு நாடகங்களின் தொகுப்பு இந்தப் புத்தகம்.
அய்யங்கார் வீட்டுப் பையனும், பஞ்சாபிப் பொண்ணும் காதலித்துத் திருமணம் புரிந்துகொள்வதால் உண்டாகும் குழப்பங்களை நவரசங்களுடன், நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாகச் சொல்லும் நாடகம், ‘சிங்கமய்யங்கார் பேரன்’.
விஞ்ஞானி ஆத்மாவால் உருவாக்கப்படும் ‘சேகர்’ என்ற மனிதனுக்கு இணையான ரோபோவால் உண்டாகும் குழபங்களே இரண்டாவது நாடகம். 2010ல் வெளியான ‘எந்திரன்’ படத்துக்கான ஆரம்ப விதை, இந்நாடகத்தின் கதையே.
No product review yet. Be the first to review this product.