‘கதாநாயகனின் கதை’ பொம்மை இதழில் தொடராக வெளிவந்த காலத்தில் சிவாஜி புகழின் உச்சியில் இருந்தார்.அவர் நடிக்கும் படங்களில் அவ்வவ்போதும் எடுக்கப்பட்ட விதவிதமான வண்ணப்படங்கள் அந்த தொடரை அலங்கரித்தன.22 வயது கலைஞன்-இளைஞன் கமிராமுன் நிற்பதற்கு முன்னதாக வாழ்ந்த நாடக உலக வாழ்கையை விவரிக்கும் இனிய நூல் இது.ஈரோட்டில் பெரியாரின் நாடகக்கொட்டகையில் நாடகம் போட்டுவிட்டு,கைநஷ்டப்பட்டு,கொட்டகை வாடகைக்காக நாடகச் சாமான்களை கொட்டுவிட்டு வந்த பரிதாப நிகழ்வு ,கொல்லங்கோட்டில் மகாராஜா முன் ‘மனோகரா’-நாடகத்தில் அம்மா வேடத்திலும் காதலி வேடத்திலும் நடித்து வந்த நிலை நாளடைவில் மாறி கதாநாயகன் மனோகரனாக நடித்து மகாராஜாவால் பாராட்டப்பட்டு வெள்ளியில் ஆடை உடையை பரிசாக பெற்று மகிழ்ந்த தருணம்,பின்பு நாடக தொழில் நசிய திருச்சிக்கே திரும்பி வந்து பஸ் கம்பனி ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்த கொடுமை,மீண்டும் நாடக பிரவேசம்.அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்துராஜ்யத்தில்’ பெரியார் முன்பு சிவாஜி வேடம் ஏற்று நடித்து கணேசன் என்ற பெயருக்கு முன்னர் ‘சிவாஜி’ என்ற பட்டதைச் சேர்த்து கொண்ட வரலாற்று நிகழ்வு.இப்படியாக இனிப்பும் கசப்புமாக அவரின் நாடக வாழ்கையில் நடந்த நிகழ்வுகள் நம் கண் முன்னே விரியச் செய்கிற நூல் இது.எளியதாக சினிமாவில் நுழைந்து விடலாம் எல்லோரும் சிவாஜி ஆகிவிடலாம் என்று நினைபவர்களுக்கு ஒரு முறை இப்புத்தகத்தை அவசியம் வாங்கி படிக்க வேண்டும்.
No product review yet. Be the first to review this product.