அழகி, தென்றல், திரைப்படங்களை எடுத்த தங்கர் பச்சானின் “சொல்ல மறந்த கதை” திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
மனிதனின் அகவேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளைச் சமன்செய்வதே வாழ்வின் சவால். 70களில் கிராமப்புறப் பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்பந்தங்களுக்கத் தமது சுயத்தை இழக்க நேரிட்டது. ஆனால் இன்றையக் கணினியுக இளைஞர்கள் தனி அடையாளங்களை இழந்து பொது அடையாளங்களுக்குள் தங்களது இருப்பைப் பத்திரபடுத்திக்கொள்கின்றனர். ‘தலைகிழ் விகிதங்கள்’ நாவலை இன்று படிக்கும்பொது நேற்றைய தலைமுறையானரின் அகப் போராட்டங்களின் வழியாக, இன்றைய இளைஞர்களின் மனச் சிக்கல்களை நம்மால் அக்கறையுடன் அனுசரணையுடன் புரிந்துக்கொள்ள முடிகிறது. கூடவே, நவீன வாழ்வின் அபத்தங்களையும் அதன் இலக்காறிய பயணங்களையும்.
No product review yet. Be the first to review this product.