செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிபடுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வழியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்ந்து கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம். மரபுகள் தமக்குள்ளாகப் பொதிந்து வைத்தித்திருக்கும் வன்முறைகள் இரண்டையும் ஒரே தளத்தில் பதிவு செய்துவிடுபவை இவரது கதைகள்.
No product review yet. Be the first to review this product.