எங்கு நாம் தவற விடுகிறோம்.சினிமா என்பது பொழுதுபோக்கிற்கான சாதனம் அல்ல. மனிதன் தன மனக் கண்களில் மாத்திரமே பார்த்து உணர்வெழுச்சிகளுக்கு உள்ளாகக் கூடிய கனவுகளுக்கு ஒரு உருவம் கொடுப்பது சினிமா என்கிற கலை, சினிமா என்பது மனித வாழ்வின் நிதர்சனங்களை,எதார்த்தங்களைத் தொடர்ச்சியான சம்பவக் கோர்வைகளின் மூலம் (திரி ஆக்ட் ஸ்டிரக்சர்) பிரதிபலித்துக்கொண்டிருந்தால் அது ஓரிடத்திலேயே தேங்கி நிற்க வேண்டியதாகிவிடும். மனித வாழ்வின் நிதர்சன உண்மைகளை அவனுடைய கனவுகளைப் (மினிமலிசம் மற்றும் அவன்ட்-கார்ட்) போலவே தொடர்ச்சியற்றத் தன்மையுடன் காட்டுவதிலேயே சினிமா என்கிறக் கலையின் அடுத்த கட்ட வளர்ச்சி இருக்கிறது.
சினிமாவை பற்றிய புரிதல் இல்லாமலும், கதைக்கும், திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசம் அறியாமலும்,கதை,கதாபாத்திரத்தின் உளவியல் தளங்களை தொட முடியாமலும், புது முயற்சிகளை எடுக்க தைரியம் இல்லாததாலும்,தளங்களை கடந்த தாகம் இல்லாததாலும், தொழிற்நுட்பங்களை கற்கும் ஏக்கம் இல்லாததாலும், கலைஞன் என கர்வம் கொள்ளாமல் கடந்து போக நினைப்பதாலும் உலக அரங்கை நாம் தவற விடுகிறோம்.
-வர்ஷினி
நியூசிலாந்த்
No product review yet. Be the first to review this product.