கவிஞர் கண்ணதாசனின் பல்லவிகள் ஒவ்வொன்றும் அவரது அநுபவத்தின் எதிரொலிகள். மனித குலத்தின் மவுனத்தில் உறங்கிய உணர்ச்சிகளின் நாவுகளாக ஒலிப்பன.
எந்தச் சூழ்நிலைக்கும் பொருந்துவதாகவும்-அதே சமயத்தில் ஒவ்வொருவர் இதயத்தையும் தொட்டு வருடுமாரும் கவிஞரால் மட்டுமே பாடல்களை எழுத முடியும் என்பதை இந்த மூன்றாவது தொகுதியில் உள்ள ஒவ்வொரு பாடலும் இசை பாடுகிறது.
கவிஞன் மனித மனத்தை ஆள்கிறான் என்ற மகத்தான உண்மைக்குக் கவிஞர் கண்ணதாசன் தனது மேதாவிலாசத்தால் நிரூபணமாகத் திகழ்பவர்.
எப்படி இவரால் எல்லாச் சூழ்\நிலைக்கும் பொருந்துமாறு எழுதமுடிந்தது?
'கல்லார்க்கும்,கற்றவர்க்கும் களிப்பருளும்' களிப்பாக தனது பாட்டு வரிகளைத் தவழச் செய்த, கவிஞர் செய்த மாயம் என்ன?
கண்ணதாசனின் பாட்டு வரிகள் ஒவ்வொன்றும் கம்ப சித்திரமாகிய மகிமை என்ன?
தனி மனித வாழ்க்கையில் - சமூக வாழ்க்கையில் உண்டாகும் நெரிசல்கள், மனவடுக்கள், மோதல்கள்,முரண்பாடுகள்,இன்ப துன்பங்கள் அத்தனைக்கும் விளக்கம் கவிஞரது திரைப்பாடல் சொல்லிச் செல்லும்.
No product review yet. Be the first to review this product.