அள்ள அள்ளக் குறையாத கவியரசர் கண்ணதாசன் உள்ளத்திலிருந்து வெள்ளமெனப் பாய்ந்தோடி வரும் தெள்ளுதமிழ்ப் பாடல்களின் இரண்டாவது தொகுப்பு நூல்,இந்நூலில் உள்ள பாடல்கள் வெறும் திரை இசைப் பாடல்களா? அல்ல!
பாட்டின் அடிக் குரிப்பாகவுள்ள படப் பெயரை நீக்கிவிட்டுப் படித்தீர்களானால், ஒவ்வொன்றும் புதிய அமைப்பில் அமைந்த நல்ல கவிதைகள் என்று உணர்வீர்கள்.
கதிரவன் உதிக்குமுன்னே 'பண்ணரசன்' கண்ணதாசனின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்கிறோம். அவை நம் மனத்தை மகிழ்விக்கும் பாடல்களாக -இசைவிக்கும் பாடல்களாக- இலக்கியத் தரமிக்க பாடல்களாக இருக்கின்றன. இவை காற்றோடு காற்றாகக் கலக்காமல் இசை வடிவில் உள்ளத்தில் கலக்கின்றன. நம் ஊனில் கலக்கின்றன. புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன.
இவை அனைத்தும் நாள்தோறும் மக்கள் மனதில் ஒலிக்கும் மணியான பாடல்கள்; மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் பாடல்கள்.தத்துவச் சுடரொளிரும் முத்தான பாடல்கள்.இவற்றுக்கு எத்தனை சிறப்புகள் கொடுக்க வேண்டுமோ அத்தனை சிறப்புகளும் கொடுத்தேயாக வேண்டும்.
இவற்றை வெறும் திரைப்பாடல்கள் தாமே என்று, யாரும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
No product review yet. Be the first to review this product.