'கவிக்குயில்' என்றால் சரோஜினி என்று பளிச்செனக் குறிப்பிடுவதைப் போல 'திரை இசைக் குயில்' என்றால், அது கவியரசர் கண்ணதாசன் ஒருவரைத்தான் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை இல்லாத் தமிழ்த் திரை இசைக் கவிஞர் என்னும் பெருமையும் அவரைத்தான் சாரும். அவரது பாடல்களைச் செவிமடுக்கும் யாரும் ஏதேனும் ஒருவகையில் பாடற்கருத்தின் பாதிப்புக்குட்பட்டவராகத்தான் இருக்கமுடியும்.
மனித சமுதாயத்தின் மீது அவருக்குப் பன்முகப் பார்வையும்,மகாகவி பாரதியைப்போல் தனக்குள் ஞானம் கைவரப்போகும் வேளையில் காலம் அவரை அழைத்துக்கொண்டது.என்றாலும் பல திரை இசைப் பாடல்களில் கவிஞரின் இந்த வேட்கை வடிவம் பெற்றிருப்பதை நாம் நன்கு உணரமுடியும்.
No product review yet. Be the first to review this product.