‘குண்டூசி’ பி.ஆர்.எஸ்.கோபால் 1937ல் ஆரம்பிக்கப்பட்ட ‘சில்வர் ஸ்க்ரீன்’ என்ற பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தார்.அவரது எழுத்துக்கள் நகைச்சுவை ததும்ப,வாழைபழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் இருக்கும்.அதனால் இவருக்கு குண்டூசி என்ற புனைபெயர் உருவானது.அந்த நாளில் வாசகர்களிடையே மிகவும் பிரபலமான பெயர் இது. ‘சில்வர் ஸ்க்ரீன்’னில் சினிமா பத்திரிகையில் முதன் முதலாக கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்தவர்.அடுத்து ‘பேசும்படம்’ மாத இதழில் ஆசிரியராக சேர்ந்தார்.அவருடைய பட விமர்சனங்கள், கேள்வி-பதில்கள் ‘பேசும்படம்’ வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.1947ல் தமது நண்பர் பி.எம்.ராதாகிருஷ்ணனுடன் இணைந்து தமது புனைபெயரான ‘குண்டூசி’ மாத இதழை தொடங்கி நடத்தினார். அடுத்ததாக பொம்மை இதழ்களில் பி.ஆர்.எஸ்.கோபால் தொடர் கட்டுரைகளை எழுதினார்.அவற்றிலிருந்து சினிமா சம்பந்தாமான சுவாரஸ்யமான சில சம்பவங்களை அனுபவங்களை தொகுத்து ‘திரைமணிக்கோவை’ என்னும் தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது.அது இன்றைய வாசகர்களுக்கு மட்டுமல்ல சினிமா பத்திரிக்கையாளர் களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
No product review yet. Be the first to review this product.