தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து யாரோ ஒரு இளைஞன் சினிமாக்கனவுகளுடன் சென்னைக்குப் பேரூந்து ஏறுகிறான்.அவனிடமிருப்பவை அந்த கனவும்,அவன் அதுவரை பார்த்த சினிமாக்களின் நினைவும்தான்.
பசித்த இந்த இளைஞர்களுக்கு சினிமாவை புரிந்து கொள்ள எளிய வழிகள் எதுவுமில்லை.
காரணம் தமிழில் சினிமா வளர்ந்த அளவுக்கு சினிமாவைப் பற்றிய எழுத்திலக்கியம் வளரவில்லை.
குறிப்பாக,சினிமாவின் அடிப்படையான திரைக்கதையின் சூட்சுமத்தை சொல்லித்தரும் புத்தகங்கள் வெகு குறைவு.
இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக,தேசிய விருது பெற்ற காதல் கோட்டை படத்தின் திரைக்கதையை முதன் முதலில் புத்தகமாக வெளியிட்டோம்.
அவை வாசகர்களின் கவனஈர்ப்புக்குள்ளாகின.
சினிமாவை நேசிக்கும்,சுவாசிக்கும் இளைஞர்களிடமிருந்தும்,
சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் கிடைத்த பாராட்டுக்களைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா,பூவே உனக்காக,உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்,சேது போன்ற வெற்றிப்படங்களின் திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.
No product review yet. Be the first to review this product.