வாலி – இரண்டெழுத்துப் பெயரல்ல.
தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில் இரண்டு நூற்றாண்டுகளை இணைத்து மீட்டும் ஓர் இசைச் சொல்.
திரையுலகின் கம்பன் கண்ணதாசன் என்றால்,வாலி-காளிதாசன்.
பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா என்று கொஞ்சும் குழந்தைத் தமிழிலிருந்து ஜனனி ஜகம் நீ என்று உருகும் தெய்வீகத் தமிழ்வரை இவர் அறியாத தமிழ் இல்லை.
வர்ணமெட்டுகளுக்கு ஏற்றாற்போல் வானவில்லின் ஏழு நிறங்களிலும் எழுதத் தெரிந்தவர்.ஒரு சொல்லுக்குள் பல சொற்களை ஒளித்துவைத்து விளையாடும் வார்த்தைச்சித்து அறிந்தவர்.
இருபத்தைந்து வயதில் எழுத வந்தார்.இடைவிடாமல் ஐம்பத்தைந்து ஆண்டுகளாக எழுதுகிறார்.
திரையுலகின் இசையும் திசையும் மாறிக்கொண்டே இருக்கிறது. வாலியின் பாடல்கள் காலத்தின் சிறகுகளாக காற்றில் நீந்திக்கொண்டிறுகின்றன
மேலே...மேலே...மேலே...
இந்த உயரம் – அவர் எல்லா நட்சத்திரங்களையும் ஆசீர்வதிக்கிற உயரம்.
-பழநிபாரதி
No product review yet. Be the first to review this product.