இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள். அதிகாரத்திற்கு எதிராக எழுதப்பட்ட இக்கதைகளை வெளியிடும் தைரியமும் அறமும் பத்திரிகைகளுக்கு இருந்திருப்பதையும் கவனிக்கவேண்டும். போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் விளைவுகளையும் இக்கதைகள் எவ்வாறு பேசியுள்ளன, அவற்றின் புனைவுத்தன்மையும் மொழியும் கட்டமைப்பும் எந்தளவுக்கு இலக்கியார்த்தமானவை என்பதையும், அன்றைய சூழலுக்குள் பொருத்திப் படிப்பதற்கு வாசிரெட்டி நவின் எழுதியுள்ள முன்னுரை போதுமானதாயுள்ளது. சமகால நடப்புகள் மீது கலைஇலக்கிய மனம் கொண்டிருந்த கரிசனத்தையும் வெளிப்பாட்டுணர்வையும் காட்டிச்செல்லும் இந்த முன்னுரையும் கதைகளும் நம்காலத்தின் நிகழ்வுகள் மீது நம்மை மனங்குவிக்கக் கோருகின்றன.
No product review yet. Be the first to review this product.