இணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும்,மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது.தவறில்லை.ஆனால் அதே சமயம் நாம் கடந்து வந்துள்ள இந்த இடத்திலிருந்து நாம் கொண்டாடவேண்டிய நம் நாயகர்களை,அவர்களின் அசாத்திய திறமையை திரும்பிப் பார்த்து மரியாதை செலுத்தவேண்டியது அவசியமாகிறது! அதற்கு ஒரு வழி அமைத்துக் கொடுப்பதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது! தமிழ்சினிமாவை நேசிப்பவர்கள் இந்தப் புத்தகத்தை ரொம்பவும் சிலாகித்து கொண்டாடுவார்கள் என்பதில் சிறிது சந்தேகமில்லை! வாழ்த்துகள் பாலகனேசன்.
-இயக்குநர் R.ரவிக்குமார்