அச்சு ஊடங்களிலும் சமூக ஊடங்களிலும் திட்டமிட்டுப் பரப்படுகிற பொய் செய்திகளாலும் கட்டு கதைகளாலும் இந்தியாவின் சமூகச் சூழலே ஆட்டங் கண்டிருக்கிறது. கும்பல் படுகொலைகள் கும்பல் வன்முறைகள் அவதூறுகள் கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை. இட்டுச் சென்றிருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயாகத் தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன.
' இந்தியா ஏமாற்றப்படுகிறது' என்னும் இந்நூல். ஆல்ட் நீயூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. வதந்திகளை பரப்புவோரை அடையாளங்காட்டி அவற்றை மிகத் தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி அச்சுறுத்தும் வகையிலான கட்டுக் கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச் செல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.
இந்துக்களின் எதிரியா ஜவகர்லால் நேரு!
உலகிலேயே மிகப்பெரிய ஊழல்வாதம் பிரதமர்களின் ஒருவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டாரா?
உலகிலேயே நான்காவது பெரிய பணக்காரப் பெண்மணியா சோனியா காந்தி!
தானொரு 'இந்து அல்லாதவன்' என்று சோம்நாத் கோவிலின் பதிவேட்டில் எழுதி வைத்தாரா ராகுல் காந்தி!
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் பிரச்சாரம் செய்யப்படுகிற மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, உண்மையிலேயே வலுவான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றனவா?
புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய வாதங்களை முன் வைத்து, வதந்திகளை உடைத்தெறிந்து, உண்மைகளைப் பேசுகிறது 'இந்தியா ஏமாற்றப் படுகிறது' என்கிற இந்நூல்.
No product review yet. Be the first to review this product.