பாலாறு இந்திய நதிகளில் மிகத் தொன்மை வாய்ந்தது. பாலாற்றைத் தொன்மையான காவிரி நதி என்கின்றனர் சில தொல்லியல் அறிஞர்கள். கோடிக்கணக்கான மக்களின் உயிர் ஆதாரமாக விளங்கிய பாலாறு இன்று வறண்டு கிடக்கிறது.
இது இயற்கையான வறட்சி அல்ல, உலகமயமாக்கலின் பின்னணியில் நமது நடுவண், மாநில அரசுகள் எவ்வாறு திட்டமிட்டு இந்நதியை அழிக்கின்றன என்பதே இப்படம். பாலாற்றின் நதிமூலமான நந்தி துர்க்கத்திலிருந்து தொடங்கி வாயலூர் முகத்துவாரம் வரை ஒரு பயணம்.
உயிரோடு இருக்கும் நதிகளை, மணல் குவாரிகள் என்று குறிப்பிடுகின்றன நமது அரசாணைகள். நதிகளை அழித்து நமது கனிம, நீர் வளங்களை கொள்ளையடிக்கும் அதிகார மையங்கள், கோடிக்கணக்கான பணம் வைத்திருந்தாலும் குடிக்க நீர் இல்லாத நிலையில் என்ன செய்யப் போகிறார்கள்?
No product review yet. Be the first to review this product.