பத்திரிகையாளர் என்ற வகையில் இப்போதும் சூழலியல் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். எழுதுவது தொழில் என்பதைக்காட்டிலும் தன் மனம் விரும்பும் ஒன்றை செய்துக்கொண்டிருக்கிறோம் என்கிற ஆறுதல் இதில் கிடைப்பதாக அவர் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. "என் நினைவில் எப்போதும் காடு உண்டு" என்கிற மு.வி. நந்தினி. 14 ஆண்டுகளாக பத்திரிகை பணியில் இருக்கிறார். குங்குமம், ஆனந்த விகடன் உள்ளிட்ட தமிழ் இதழ்களில் பணியாற்றியிருக்கும் இவர், தற்போது 'த டைம்ஸ் தமிழ் டாட் காம்' என்ற இணைய இதழையும் ' செய்து பாருங்கள்' என்ற பெயரில் கைவினை கலைகளுக்கான இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
சுற்றுசூழலியல் குறித்த அவரது இந்த கட்டுரைத் தொகுப்புகள் வெறுமனே எழுத்துக்களாக மட்டும் இல்லாமல், தனிமனிதனின் சுற்றுசூழல், இயற்கை சார்ந்த புரிதலை மேம்படுத்தும் முனைப்பை காட்டுவதாக இருக்கிறது. பொருளாதாரம், சாதி மத அரசியல், வர்க்க பிரச்சனைகளுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதைவிட கூடுதலான முக்கியத்துவம் சுற்றுசூழல் சார்ந்த தீவிர செயல்பாடுகளில் நாம் செலுத்தியாக வேண்டிய தருணம் இது.
No product review yet. Be the first to review this product.