சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்த வரலாற்று வன்கொடுமை வெண்மணி . தமிழகத்தில் வெண்மணி என்கிற ஒற்றை வார்த்தை தரும் தாக்கத்தையும், எழுச்சியையும், தவிர்க்கவியலாதது போலவே, வெண்மணியைப் பற்றிப் பேசினால்… ‘கீழைத் தீ’ – பின் வெண்மணி நாவல் பற்றிப் பேசுவதையும் தவிர்க்க இயலாது என்பதே இப் படைப்பின் வெற்றி.இது எரிக்கப்பட்டதின் சாம்பல் வரலாறு மட்டுமல்ல. மாறாக, மீண்டெழுந்த மக்கள் மன்றம் எழுதிய தீர்ப்பின் வரலாறும்தான். இது ரத்தம் சிந்திய வரலாறு மட்டுமல்ல. மாறாக, வர்க்க எதிரியின் ரத்தத்தில் கை நனைத்த வரலாறும்தான்.
No product review yet. Be the first to review this product.