தொடர்ந்து குழந்தைகளுடன் பயணிக்கும் செயல்பாட்டாளரான எழுத்தாளர் க.சரவணன். தன் அனுபவங்களின் வாயிலாகத் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்ந்து இத்தொகுப்பைக் கொண்டுவந்துள்ளார். குழந்தைகளை அணுகும் முறை, அவர்களின் உளவியல் பிரச்சனைகள், ஆரோக்கியம், விருப்பங்கள் போன்றவை குறித்து இக்கட்டுரைகள் விரிவாகப் பேசுகின்றன. குழந்தைகளின் உலகில், நவீன விஞ்ஞான சாதனைகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் எடுத்துரைக்கும் இவ்வெழுத்துக்கள். குழைந்தைகள் உலகின் வேர்களின் வழியாகப் பயணித்து, அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் உண்மைகளை உரக்கக் கூறுவதாய் அமைந்திருக்கின்றன. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் இந்நூல், நிச்சயமாகக் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணை செய்வதாய் அமைந்துள்ளது.