ஒவ்வொரு மனிதரிடமும் சில கதைகள் இருக்கும், ஆனால் ஒரு சிலரால்தான் தன்னிடம் உள்ள கதையைச் சுவையாகவும் வலிமையாகவும் சொல்ல முடிகிறது. அதைச் சிறுகதை என்னும் அலாதியான கலையாக மாற்றும் நுட்பம் மிகச் சிலருக்கே வசப்படுகிறது, வாசிப்பின் வீச்சு, வாசித்ததை உள்வாங்கிக்கொள்ளும் விதம், எழுத்துத் திறன், தொழில்நுட்ப அம்சங்கள், மொழி, கலை நோக்கு, மெனெக்கெடல் எனப் பல அம்சங்கள் ஒரு கதையைக் கலாபூர்வமான படைப்பாக மாற்றுவதற்குத் தேவை, தொகுப்பில் உள்ள கதைகளை எழுதிய சிலரிடமேனும் இந்தக் கூறுகள் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. அதுவே இந்தத் தொகுப்பின் ஆரோக்கியமான அம்சம் எனச் சொல்லலாம்.
No product review yet. Be the first to review this product.