"ஆண்களே ஆதிக்கம் செலுத்திய திரையுலகிலும் அரசியலிலும் அரை நூற்றாண்டு காலம் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்து முத்திரை பதித்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
'சிட்டுக்குருவிக்கென்னகட்டுப்பாடு' என்று வெள்ளித்திரையில் சிறகடித்துப் பறந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சாதித்த சவால்கள் தான் எத்தனை எதன்னை? அந்த சவால்களை அவர் எதிர் கொண்ட நேர்த்திதான், பிற்காலத்தில் அரசியலில் ஓர் இரும்புப் பெண்மணியாக அவர் ஜொலிக்க உதவியது.
அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு நாளிதழ்களிலும் வார, மாத இதழ்களிலும் பல தொடர்கள் வந்தன. ஆனால், அம்மா அவர்களின் மறக்க முடியாத புன்னகை முகத்தை அட்டைப்படமாக்கி 'அம்மாவின் கதை' என்ற தலைப்பில் அவள் விகடன் இதழில் 25 வாரங்கள் வெளிவந்த தொடர் உள்ளத்தை நெகிழச் செய்தது.
துணிச்சல், மிடுக்கு, யாருக்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத கம்பீரம்... இதுதான் ஜெயலலிதா என்ற அம்மா அவர்களின் பிம்பத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. தெரிந்த மனிதரைப் பற்றி பலருக்கும் தெரிந்திராத பல சுவையான சம்பவங்கள் இந்த நூலில் மிக அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட ஓராண்டு அவள் விகடனில் வெளியான தொடரை கிழித்தெடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். தொடரில் அம்மாவின் திரையுலக வாழ்வைப் பதிவு செய்ததோடு அரசியல் வாழ்க்கையும் விருப்பு வெறுப்பின்றி நிறைவாக நூலில் சேர்ந்திருப்பது அம்மாவைப் பற்றிய பிம்பத்தை முழுமையாக அறிய உதவுகிறது.
அம்மா அவர்களைப் பற்றி ஓர் அருமையான தொடரை எழுதிய கி.கிருபாகரன் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
- டாக்டர் வா. மைத்ரேயன், எம்.பி.
No product review yet. Be the first to review this product.