உலகம் புகழும் இலக்கிய மேதை ‘லியோ டால்ஸ்டாய்’அவர்களின் THE WISDOM OF CHILDREN என்ற ஓரங்க நாடக நூலை ஆங்கிலத்தில் படித்தேன். படித்தபோது நான் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன்.குழந்தைகளின் நுண்ணறிவை மையமாகக் கொண்ட நாடகங்கள் அவை. ஆனால் பெரியவர்களுக்கு அறிவு கொளுத்தும் முறையில் அவை படைக்கப்பட்டுள்ளன. முற்போக்குச் சிந்தனைகள் அழுத்தம் திருத்தமாக இந்நாடகங்களில் சொல்லப்பட்டுள்ளன. மனித குலம் முழுமைக்கும் பயன் நல்கும் நாடகங்கள் அவை.ஆகவே இத்தகைய அரிய சிந்தனைகளைக் கொண்ட அந்நாடகங்கள் தமிழ்க் குழந்தைகலுக்கும் தமிழ் மக்களுக்கும் சொல்லப்படாமல் விடுபட்டுப் போகக் கூடாது என்ற ஆர்வம் காரணமாக அதனை உடனே நான் மொழி பெயர்த்துவிட்டேன்.
க.முத்துச்சாமி
No product review yet. Be the first to review this product.