திரை இசை ,மக்கள் இசை அதன் எழுபது ஆண்டு வரலாற்றில் வேறு எந்தப் படாகரும் பெறாத இடத்தை டி.எம்.எஸ் பெற்றிருக்கிறார்.திரை இசையில் அழகான மெல்லிசைப் பாடல்கள் தலை தூக்கிய போது அந்த படலத்தில் சௌந்தரராஜன் முக்கிய பங்கு வகித்தார் ,அவருடைய இனிமையான குரல் ,சிறந்த தமிழ் உச்சரிப்பு,உணர்ச்சி பூர்மான பாட்டு ,நடிகருக்கு ஏற்றாற்போல் குரலை மாற்றிப்பாடும் தன்மை ஆகியவை அவரைச் சிகரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டது.தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்,சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்தியதை போல் வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தவில்லை.காலமாற்றங்களுக்கு ஈடு கொடுத்து தன்னுடைய கலை ஆற்றலை டி.எம்.எஸ். காண்பித்ததால் நான்கு தலைமுறை நடிகர்களுக்கு அவரால் பாட முடிந்தது.இப்படி இசையில் நிலைத்த நீடித்த ,தன்னிகற்ற புகழ் பெற்று விளங்கும் வாழ்க்கை வரலாறே இந்நூல்.
No product review yet. Be the first to review this product.