மக்கள் திலகத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் ஆர்.என்.நாகராஜராவ், அவரின் உதவியாளரும், மருமகனுமான எ.சங்கர்ராவ், மக்கள் திலகத்தின் 35 படங்களில் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் மக்கள் திலகம் பற்றி அணு அணுவாய் அறிந்து வைத்திருக்கிறார். அவற்றை விவரித்த போது மக்கள் திலகத்தின் கொடையுள்ளம், அன்பு, பாசம், தன்னம்பிக்கை, வீரம், விவேகம், ஆனந்தம், அழுகை எல்லாம் கண்முன் தெரிந்தது. அதை அப்படியே எழுத்துக்களில் பதிவு செய்திருக்கின்றன. 23 ஆண்டுகள் ஆன பின்னும் கொஞ்சமும் காயாமல் இன்னும் அப்படியே இருக்கின்றது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனும் பெரு மழையின் ஈரம். அந்த ஈரத்திலேயே நிற்கும் கோடானு கோடி இதயங்களை இந்த புத்தகக் காற்று குளிர்விக்கும்; சிலிர்க்கவைக்கும்.
No product review yet. Be the first to review this product.