ஆட்ரியைப் பற்றிய செய்திச் சுருக்கம்
. ஆட்ரியின் உடலமைப்பும், ஆடை அலங்காரமும் இருபதாம் நூற்றாண்டு அவருக்குத் தனி இடத்தைப் பெற்று தந்தது.
. ஆட்ரிக்காக புதுப்புது கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டிய நிலையில் அன்று ஹாலிவுட் இருந்தது.
. ஆட்ரி பாசத்தை எதிர் நோக்கியே பிறந்தவர். அவர் அதை பிறருக்கு அளிப்பதில் தீவிரமாய் இருந்தார்.
. திருமணம் என்றால் அது உண்மையான திருமணமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திருமணத்தையே ஆட்ரி விரும்பினார்.
. ஆட்ரி ஆரம்பத்திலேயே வாழ்க்கையை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டார். கடைசி வரைக்கும் அவர் தனக்காக எதையும் எதிர்பார்ப்பதை தவிர்த்திருக்கிறார்.
. அவருடைய மரணத்திற்குப் பின் கிரிகரிபேக் கண்ணீரோடு ஆட்ரியின் மனதிற்கு உகந்த பாட்டை பாடினார். அது ரவீந்திரநாத் எழுதிய "முடிவில்லா காதல் " என்ற பாடலாகும்.
. ஹிட்லரின் நாஸிப் படைகளிலிருந்து தப்பித்தவர். ஹாலந்து குளிரில் தப்பிப் பிழைத்தவர். ஹாலிவுட்டில் லட்சிய நடிகையாக விளங்கியவர். சிறந்த மனித நேயம் உள்ளவர். குடல் புற்றுநோயால் இறந்தார்.
No product review yet. Be the first to review this product.