ஷகிலாவை தென்னிந்திய மக்களுக்கு எப்படித் தெரியும் என்பதை அறிவோம். ஆனால் அந்த வாழ்க்கை அவர் ரசித்த ஒன்றல்ல. ஒரு சாதாரண பெண்ணாக மசினக்குடி காடுகளில் பழங்குடியினர் வீடுகளில் நாட்கணக்கில் தங்கி வன விலங்குகளின் வாழ்வை ரசிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமானது'
நான்கு தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருந்த காஞ்சனாவைத் தெரியும். அவர் சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு அவரைத் வீட்டை விட்டே துரத்திய பெற்றோரை எதிர்த்து வழக்கு போட்ட அவர், தான் அந்த வழக்கில் மீட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை திருப்பதி கோயிலுக்கு எழுதி வைத்து விட்டு எளிய பெண்ணாக வாழ்க்கையைத் தொடர்வது..... ஒரே படத்தில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, அலட்சியமாகக் திரையுலகை அணுகிப் பார்த்து வெற்றிகளைக் குவித்து, மணிரத்னத்தின் 'திருடா திருடா' படம் மூலம் தமிழுக்கும் வந்து 'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு' என ஆடிய அனு அகர்வால் ஒரு விபத்தில் சிக்கி கோமாவுக்குச் சென்று, தான் யார் என்பதே அறியாமல் இப்போது வாழ்ந்து வரும் இன்னொரு வாழ்க்கை.... இப்படி தேவதைகள் பலர் தரையில் இறங்கி நடந்த தருணங்கள் படிக்கப் படிக்க நெகிழ்ச்சிச் செய்பவை !
இந்த நூலின் தலைப்பில் வேண்டுமானால் 'கதை' இருக்கலாம். ஆனால், இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் னொரு சதம் நிஜம்.
No product review yet. Be the first to review this product.