/files/fzpDTXSf9mYI/414wGUE6LrL-3-26-2021,6:42:31PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ந.முத்துசாமி நாடகங்கள்

(0)
நாற்காலிக்காரர் நாடகத்தில் இவ்விரு கோஷ்டிகளுக்கு இடையே உருவாகும் போட்டி, அதன் வெற்றி தோல்வி எல்லாமே நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவன் கையில் என்பதன் மூலம் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் வாக்குப் போடுபவன் என்றும் பாதிக்கப்படுபவன் என்பதன் குறியீடாக உருவகிப்பதன் மூலம் எல்லாமே ஓர் விளையாட்டு; அரசியல் விளையாட்டு (Political Game) படிமத்தை உண்டாக்கியிருந்தார்.

-செ. ரவீந்திரன்

***

சாதாரணப் பேச்சுக்களைச் செதுக்கிச் செதுக்கி நாடகப் பிரதிக ளாக்கிடும் வித்தையை முத்துசாமி கைவரப்பெற்றவராக விளங்குகிறார். இளைஞர்கள் விளையாடும் சீட்டுக்கட்டு விளையாட்டையும் சிறுவர்கள் விளையாடும் கோலிக்குண்டு விளையாட்டையும் காட்டி ஜெயித்த கட்சி, தோல்வியுற்ற கட்சி என்னும் இரு தரப்பினராக்கிப் பதவிக்குப் போட்டி யிடும் சமூக எதார்த்தங்களை எடுத்துக்காட்டி சமூகத்தை எள்ளி நகை யாடும் ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக நாற்காலிக்காரர் நாடகத்தில் வெளிப்படுகிறார்.
‘போ, வீட்டுக்குள்ளே போயி ஒம்பாட்டுக்கு ஆம்படையான் பொண்டாட்டி விளையாட்டு விளையாடு போ’ இங்கு திரும்பி ‘சபாஷ்... நீங்க ஜமாய்ங்க. சீட்டு மூளைக்கு வேலை கொடுக்கிற ஆட்டம். சில்லரை வச்சு ஆடணும். சும்மா முன்னூத்தி நாலு, தொள்ளாயிரத்து நாலுன்னு ஆடுறதிலே அர்த்தமில்லே. அது என்ன ஆட்டம்? நாட்டுப்புறத்தான் ஆட்டம். மத்தியானத்திலே திண்ணை தூங்கிங்க ஆட்டம். காசு வைக்கணும். அதுதான் ஆட்டம். மூளையே காசால அளக்கணும். தோக்கறவன் முட்டாள். ஜெயிக்கிறவன் ஞானி, அவன் மூளை கிலோ கணக்கிலே காலிபிளவர் மாதிரி.’
நாற்காலிக்காரர்: (தனக்குத்தானே) ‘நல்லது சொன்னா எங்க ஏறுது? இரத்தத்திலே ஊறிப்போச்சு. பரம்பரை பரம்பரையா ரத்தமும் சதையும் எலும்பும் தோலும் அதுவாவே இருக்கு. காட்டுல வேட்டையாடின கூட்டங்கறதுக்கு இன்னமும் மனுசன் சாட்சியா இருக்கான்.’
வேடிக்கை பார்ப்பவர்: (விளையாட்டைக் கவனித்துக் கொண்டே நாற்காலிக்காரர் பக்கம் கையைக் காட்டி) போய்யா... போய்யா...
சீட்டுக்கட்டு கோஷ்டி: (மும்முரத்தில் இவர்கள் பேச்சைக் கவனிக்காது
பேசியதன் கடைசி சொல்லைப் பிடித்துக் கொண்டு) போய்யா...
போய்யா...
கோலிக்குண்டு கோஷ்டி: (அனிச்சையாய்) போய்யா... போய்யா...

- கே. ஏ. குணசேகரன்

***

ந. முத்துசாமியின் நாடகங்களில் வரும் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவன் என்ற வகையில் அவரது நாடகங்கள் அன்றைய எனது வளர் இளம் பருவ மனதில் சமூகம் பற்றிய மாற்று சிந்தனையை விதைத்ததோடு மட்டுமல்லாமல் தெய்வ நம்பிக்கை, சாதி, மதம், அரசியல் ஆகிய நம்பிக்கைகளை கலைத்துப் போட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.

-கே.எஸ். கருணா பிரசாத்
Price: 850.00

In Stock

Publisher
Publisher Year
2015
Number Of Pages
1060
Weight
1160.00 gms
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.