உறக்கமற்ற வெண்ணிற இரவுகளில் அம்பிகா, பாம்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபட்டாள். அவள் யாரை நினைத்து அழைக்கிறாளோ அவராக உருமாறி அவன்முன் வந்து அமர்ந்து, பாம்பு விடியும் வரை பேசிக் கொண்டிருக்கும். பாம்பின் அழகு வேறு எதற்கும் புவிமிசை வாய்க்கவில்லை. படமெடுத்துக் கொத்தும் போது, நஞ்சு உடம்பில் ஊறி சாவின் விளிம்பில் நிறுத்தம் போகத்திளைப்பின் உச்சத்தைக் தொட்டு மீளும் அக்கணம் அம்பிகா படுக்கை மீது நெளித்துத் தோலுரிப்பாள். பாம்பு மனிதரைப் போல அழும் உயிரி; அதன் கண்ணீர் நீல நிறத்தில் படத்தின் இரு பக்க விளிம்புகளிலும் வழியும். ஆம், பாம்பு பாகத்திலும் கோபத்திலும் படமெடுக்கும்: அது போலவே அழும்போது படமெடுக்கும். அக்கண்ணீர் அதன் நஞ்சைவிட அடர்த்தியானது. படம் அருகே முகத்தைக் கொண்டு சென்று நாநுனியால் அதை நக்கிச் சுவைத்தவர்க்கு மரணமில்லை. செம்புலியையொத்த மரணமற்ற உடம்பாய் விளையும். நீலப் பாதரசம் போன்ற பாம்பின் கண்ணீரும் திரவ உலோகம்; அணுவின் நுண்ணியதாய் அதை இறுதிவரை பிளந்து கொண்டே செல்ல முடியும். அனுவின் வெற்றிடத்தில் அதன் ருசியை அறிய முடியும். இதுவரை அந்த ருசிக்கு யாரும் பெயரிட்டதில்லை.
No product review yet. Be the first to review this product.