ஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்,” என்றார். உடனே துக்ளக் கேள்வி – பதிலில், “அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்,” என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, “ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே!” என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது. -புத்தகத்திலிருந்து